குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தீவிரவாத விசாரணைப் பிரிவு
சிறிலங்கா காவல்துறையின், தீவிரவாத விசாரணைப் பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் நேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதற்கு முன்னதாக, காவல்துறை மா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில், தீவிரவாத விசாரணைப் பிரிவு இருந்து வந்தது.
தற்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் கீழ் தீவிரவாத விசாரணைப் பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது.