மேலும்

சிலாபத்தில் பதற்ற நிலை – ஊரடங்குச் சட்டம் அமுல்

சிலாபம் காவல்துறை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

தாக்குதலுக்கு தயாராவதாக முகநூலில் வெளியாகிய போலிச் செய்தி ஒன்றை அடுத்து, சிலாபம் நகரில் உள்ள வணிக நிலையங்களுக்குள் புகுந்த கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து. அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், அனைத்து வணிக நிலையங்களும் அடைக்கப்பட்டன.

வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கலைக்க சிறிலங்கா இராணுவத்தினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, இன்று பிற்பகல் தொடக்கம் நாளை காலை 6 மணிவரை சிலாபம் காவல்துறைப் பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *