மேலும்

கொழும்பு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கம் – ஒரே குடைக்குள் முப்படைகள், காவல்துறை

சிறிலங்கா அரசாங்கம்  கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம்  என்ற புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.  மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து இராணுவ, கடற்படை, விமானப்படை, மற்றும் காவல்துறை பிரதேசங்களும், உடனடியாக ,இந்த கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகம்,  மேற்கு படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே,  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் றியர் அட்மிரல் டபிள்யூஏஎஸ்எஸ் பெரேரா, விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் டபிள்யூஎல்ஆர்பி றொட்றிகோ, காவல்துறையின் கண்காணிப்பாளர் அனில் பிரியந்த ஆகியோர், இந்த நடவடிக்கைப் பணியகத்தின் இணைப்பதிகாரிகளாக பணியாற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இந்த கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் செயற்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *