மேலும்

அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடக் கூடாது – ஜேவிபி

அமெரிக்காவுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடக் கூடாது என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர்,

‘2018 ஓகஸ்ட் 28ஆம் நாள் சோபா உடன்பாடு தொடர்பான வரைவு ஒன்றை சிறிலங்காவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி, அமெரிக்க இராணுவத்தினர் கடவுச்சீட்டு இல்லாமல்,  அமெரிக்க அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன் சிறிலங்காவுக்குள் நுழைய முடியும்.

இந்த உடன்பாட்டுக்கு அமைய சிறிலங்காவுக்குள் நுழையும் அமெரிக்க படையினரை சிறிலங்கா அதிகாரிகள் சோதனையிட முடியாது.

சிறிலங்காவுக்குள் நுழையும் அமெரிக்க கப்பல்களை சோதனையிடும் உரிமையும் சிறிலங்கா அதிகாரிகளுக்கு இருக்காது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாடு, ஒருதலைப்பட்சமானது.  அதிலுள்ள சில பிரிவுகள் உள்நாட்டுச் சட்டங்களுக்கு எதிரானது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த உடன்பாட்டில் கையெழுத்திடக் கூடாது.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *