சோபாவில் கையெழுத்திடாது சிறிலங்கா அரசாங்கம் – ஐதேகவும் வாக்குறுதி
அமெரிக்க அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.