மேலும்

மூன்றாவது தடவையாக அட்மிரல் கரன்னகொட சிஐடியினால் விசாரணை அழைப்பு

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, மூன்றாவது தடவையாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14 ஆவது சந்தேக நபராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்தார்.

தன்னைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றத்தில், தடை ஆணை கோரியிருந்த அவருக்கு, உச்சநீதிமன்றம் சாதகமான உத்தரவை வழங்கியிருந்தது.

அத்துடன் கடந்த 11ஆம் நாள் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய, அவரிடம் காலை தொடக்கம் மாலை வரை விசாரணைகள் நடத்தப்பட்டன. அதற்குப் பின்னர், மீண்டும் ஒருமுறை அவரிடம் 6 மணிநேர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மூன்றாவது தடவையாக அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *