மத்தலவை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த இந்தவாரம் அமைச்சரவையில் முடிவு
மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, இந்த வாரம் அமைச்சரவை முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தல விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை இந்தியாவின் விமான நிலையங்கள் அதிகார சபையிடம், கையளிப்பது தொடர்பான, அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.
நட்டத்தில் இயங்கி வரும், மத்தல விமான நிலையத்தை, இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து கடந்த ஆண்டு தொடக்கம், இந்தியாவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியது. பின்னர், இந்தப் பேச்சுக்கள் முடங்கிப் போயின.
இந்தநிலையிலேயே மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, இந்த வாரம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.