ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு நீதி கோரி யாழ். நகரில் போராட்டம்
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது நினைவு நாளான இன்று, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இன்று காலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
ஊடக அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு முன்னதாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதையடுத்து, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஊடக அமைப்புகளின் பிரதி்நிjதிகள், ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.