சீன மொழியில் சிறிலங்கா பிரதமரின் சுயவரலாற்று நூல்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூல் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூலை, சம்பத் பண்டார எழுதியுள்ளார். இதனை, பேராசிரியர்கள் சாங் யூ மற்றும் யின் ஷிசான் ஆகியோர் சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.
சீன மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட இந்த நூல் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்கா அரச தலைவர் ஒருவரின் விரிவான சுய வரலாற்று நூல், சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.