மேலும்

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் – இந்த வாரம் முடிவு

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இந்த வாரம் முடிவு ஒன்றை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலைய விவகாரம் தொடர்பாக, இந்த வாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து முகாமைத்துவம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம்  முடிவு செய்திருந்தது.

இதுதொடர்பாக முன்வைக்கப்பட்ட திட்டம் குறித்து தாம் பரிசீலனை செய்து வருவதாகவும், சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் இணைந்து,  ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்ட போதும், பின்னர் அது தொடர்பான பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *