மேலும்

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நாளை சிறிலங்கா வருகிறார்

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுயுல்சி நகானே, மூன்று நாட்கள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார் என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு ஜப்பான் கொடையாக வழங்கியுள்ள, இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளை பணியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கவே இவர் சிறிலங்கா வரவுள்ளார்.

நாளை மறுநாள் கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க  அமைச்சர் இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளையும் சிறிலங்கா கடலோரக் காவல் படையிடம் கையளிப்பார்.

சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து, பேச்சு நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *