மேலும்

அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – குமார் சங்கக்கார

அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஏதும் தமக்கு இல்லை என்றும், தாம் ஒருபோதும் அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும், சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் குமார் சங்கக்கார வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார் என்று ஊகங்கள் வெளியாகி வந்த நிலையிலேயே, அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தான் ஓய்வாக இருக்கவே விரும்புவதாகவும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு தாம் வரப் போவதில்லை என்றும் குமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *