மேலும்

ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன?

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கபீர் காசிம், மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையிலேயே ராஜகிரியவில் உள்ள கபீர் காசிமின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் கோத்தாபய ராஜபக்ச.

90 நிமிடங்கள் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்த போதும், அரசியல் விடயங்களைப் பேசுவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *