மேலும்

சீனாவின் உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவில்

சீனாவின் உயர்மட்ட அரச அதிகாரி ஒருவர் சிறிலங்காவில் தற்போது பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் தேசிய சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரசின் வெளிவிவகாரக் குழு உதவித் தலைவரான கொங் குவான் என்ற உயர்மட்டப் பிரமுகரே சிறிலங்கா வந்துள்ளார்.

இவர் சிறிலங்காவில் பல்வேறு அரச தரப்பு பிரமுகர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *