மேலும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டனர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் வகையிலும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நேற்று வேட்கை என்ற நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழின் ஏற்பாட்டில், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *