மேலும்

நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை – ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை 10 மணிக்கு அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன.

புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியல் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஐதேகவினால் வழங்கப்படவுள்ளது.

இந்த அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்படும்.

இவ்வாறு விலகிச் சென்றவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் சாத்தியங்கள் இல்லை என்றும், அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *