மேலும்

இன்று மீண்டும் சீனா செல்கிறார் ரணில் – அடுத்தமாதம் மைத்திரி பயணம்

ranilசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, சீனாவின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள சில கைத்தொழில் வலயங்கள், கொள்கலன் முனையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நிலையங்கள், படைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தி இடங்களை அவர் பார்வையிடவுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் அனுர பிரியதர்சன யாப்பா, சம்பிக்க ரணவக்க, மற்றும் அதிகாரிகளும் இடம்பெறவுள்ளனர்.

வரும் 17ஆம் நாள் வரை சிறிலங்கா பிரதமர் சீனாவில் தங்கியிருப்பார்.

இதற்கிடையே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *