சிறிலங்காவுக்கு 90 மில்லியன் டொலர் சலுகைக்கடன் வழங்குகிறது ஜப்பான்
சிறிலங்காவின் அபிவிருத்திக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஜப்பானிய அரசாங்கம் 90 மில்லியன் டொலர் (13 பில்லியன் ரூபா) சலுகைக்கடனை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான, பிரகடனப் பத்திரத்தை, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகமா, நேற்று முன்தினம், கையளித்தார்.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்திருந்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கே, இந்த சலுகைக் கடனை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், 25 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த சலுகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்னு 1.4 வீத வட்டியையே சிறிலங்கா செலுத்த வேண்டும்.
இதுபோன்ற சலுகைக்கடனை சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்குவது இதுவே முதல்தடவையாகும்.