மேலும்

“எங்கள் வாக்கு சிங்கள பௌத்தருக்கே” – தெற்கில் தூண்டப்படும் இனவாதம்

Racist-postersகேகாலை மாவட்டத்தில் இனவாதத்தைத் தூண்டும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்  ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம்.

“கட்சி அல்லது நிறம் எதுவானாலும், எங்கள் வாக்கு ஒரு சிங்கள பௌத்தருக்கே” என்று சிங்களத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் கேகாலை மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டு வருகின்றன.

கேகாலை மாவட்டத்திலேயே ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம் போட்டியிடுகிறார்.

அவரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே, சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

சிறுவர்கள் இந்தச் சுவரொட்டிகளை ஒட்டும் ஒளிப்படங்களும் வெளியாகியுள்ளன.

Racist-posters-kegalle

இதுகுறித்து விசனம் வெளியிட்டுள்ள கபீர் காசிம், தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *