லண்டனில் துடுப்பாட்டப் போட்டியில் பந்து தாக்கி யாழ்ப்பாண வீரர் மரணம்
பிரித்தானியாவில் துடுப்பாட்டப் போட்டியின் போது, நெஞ்சில் பந்து தாக்கி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை லண்டனில் உள்ள சுரே மைதானத்தில் இடம்பெற்றது.
பாவலன் பத்மநாதன் என்ற 24வயது வீரரே உயிரிழந்தவராவார்.
பிரித்தானிய தமிழ் லீக் நடத்திய சுற்றுப் போட்டியில் மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் துடுப்பாட்டப் போட்டியில் பங்கேற்ற போதே இவர் மரணமானார்.
நெஞ்சில் பந்து தாக்கியதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் அங்கு மரணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணமான பாவலன் பத்மநாதன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
Rip