சிறிலங்காவின் பிரதி அமைச்சர் திடீர் மரணம்
சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு,மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க சற்று முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.
54 வயதான நிரஞ்சன் விக்கிரமசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாவத்தகம தொகுதி அமைப்பாளருமாவார்.
இவர் 2010ம் ஆண்டு முதல்முறையாக குருநாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.