விடைபெற்றார் சிராணி – புதிய பிரதம நீதியரசர் சிறீபவன்
சிறிலங்காவின் 43வது பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க இன்று, உயர்நீதிமன்றத்தில் சக நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பணியாளர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.
இக்கட்டான நேரத்தில் தனக்காக குரல் கொடுத்த, பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், தாம் இன்றுடன் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.
நாட்டின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் பொறுப்பேற்பார் என்றும் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.