மேலும்

வொசிங்டன் பொங்கல் விழாவில் நிஷா பிஸ்வால் – சிறிலங்கா தூதுவருடன் முக்கிய பேச்சு

nisha-desai-biswalவொசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கலந்து கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவிலும், இந்தியாவிலும் உலகின் மற்ற நாடுகளிலும் இன்று தைப்பொங்கலைக் கொண்டாடும் தமிழ் நண்பர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இன்று வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவின் போது, அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் காரியவாசத்துடன், நிஷா தேசாய் பிஸ்வால் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறவுள்ள முதலாவது உயர்மட்டக் கலந்துரையாடல் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *