மேலும்

சீனாவுடனான உறவுக்கு சிறிலங்கா முன்னுரிமை கொடுக்குமாம் – ரணில் கூறுகிறார்

ranil-chinese-ambசீனாவுடனான உறவுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும், இருதரப்பு உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்ஹாவோ இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, சீனப் பிரதமர் லி கெகியாங் கொடுத்தனுப்பிய வாழ்த்துச் செய்தியை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சீனத் தூதுவர் கையளித்தார்.

இதன்போது, சீனத் தூதுவர்,  தமது நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் சிறிலங்காவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்குடையில் வரலாறு ரீதியான உறவுகள் நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும், சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கும்.

அத்துடன், சீனாவின் முதலீடுகளைத் தொடர்ந்தும் வரவேற்கும்.

பல ஆண்டுகளாக சீனாவும் சிறிலங்காவும் பலமான  உறவுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த உறவுகள் தொடரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *