மங்கள சமரவீரவை புதுடெல்லி வருமாறு சுஸ்மா அழைப்பு
சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை புதுடெல்லிக்கு வருகை தருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்ற மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதன்போதே அவர், புதுடெல்லிக்கு வருகை தருமாறு, சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.