மேலும்

சொந்தப் பேனாவினால் புள்ளடியிட்டால் வாக்கு நிராகரிக்கப்படும் – தேர்தல் ஆணையாளர்

Mahinda Deshapriyaவாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படும் பேனாவினால் புள்ளடியிடப்படாத வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், வாக்களிப்பு நிலையங்களில் வழங்கப்படும் பேனாவினால் மட்டுமே வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளில் புள்ளடியிட வேண்டும்.

வாக்காளர்கள் தமது சொந்த பேனாவை எடுத்துச் சென்று புள்ளடியிடுவது தவறு.

வாக்குச்சீட்டில் புள்ளடியிடுவதற்காக வாக்காளர்களுக்கு நாம் செம்மஞ்சள் அல்லது மண்ணிற பேனாவை வழங்குவோம்.

ஏனைய எந்த நிறப் பேனாவினாலும் புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும்.

எனவே வாக்காளர்கள், தமக்கு வழங்கப்படும் பேனாவினால் மாத்திரம் புள்ளடியிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *