மேலும்

இந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி

chinaஇந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது.

சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது.

இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான  தாகத்தின் வெளிப்பாடு என்று தகவல்கள் கூறுகின்றன.

நீருக்கடியில் முதலாவது தேடுதல் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசுபிக் கடலிலும், கடந்த ஓகஸ்ட் மாதம் இது போன்ற 52 நாள் தேடுதல் ஒன்றை சீனா மேற்கொண்டிருந்தது.

இதன் மூலம், பல்வேறு உலோக, பாறை, மற்றும் நீர் மாதிரிகளை சீன நீர்மூழ்கிக் கப்பல் சேகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *