மேலும்

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்காவின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று குழுநிலை விவாதத்தை அடுத்து, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 115 வாக்குகள் அளிக்கப்பட்டன.  எதிராக 12 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதன் மூலம், 103 பெரும்பான்மை வாக்குகளால், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் அஜித் குமாரவும் மட்டுமே, பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்பு நேரத்தில், ஜாதிக ஹெல உறுமய, ஐதேக, மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *