மேலும்

சிறிலங்காவின் நீர்வரைவியல் ஆய்வுக்கு உதவ அமெரிக்க நிபுணர்கள் வருகை

சிறிலங்காவின் நீர்வரைவியல் (hydrographic) முயற்சிகளுக்கு   ஆதரவு வழங்க அமெரிக்க நிபுணர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மற்றும் அமெரிக்க கடற்படை வானிலை மற்றும் கடல்சார் கட்டளை ஆகியவற்றின் நிபுணர்கள் குழுவே கொழும்பு வந்துள்ளது.

இந்த திட்டம் சிறிலங்கா அதன் நீர்நிலைகளை வரைபடமாக்குவதற்கும், பாதுகாப்பான வணிக கப்பல் பாதைகளை உறுதி செய்வதற்கும், கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் உதவும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீர்வரைவியல் ஆய்வுகள் பாதுகாப்பான கப்பல் வழிசெலுத்தலை உறுதி செய்வதற்கு உதவுகின்றன.

கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு கடற்பரப்பைப் புரிந்து கொள்வது இது மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நவம்பர் 14 ஆம் திகதி சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில்  புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்து, அமெரிக்க நிபுணர்களின் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *