மேலும்

Archives

தமிழர் பிரச்சினை குறித்து மூச்சு விடாத சிறிலங்கா அதிபர்

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்னெக்கும் – இந்தியப் பிரதமர் நம்பிக்கை

சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை சிறிலங்கா  அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள்

தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

இணையதள செய்தி நிறுவனத்தில் சிறிலங்கா காவல்துறை தேடுதல்

மீரிஹானவில் உள்ள Newshub.lk இணையத்தள செய்தி நிறுவன பணியகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுக்காலை தேடுதல் நடத்தியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சரை போட்டி போட்டு சந்தித்த இந்திய, சீன தூதுவர்கள்

சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல்

இந்தியக் கடற்படைக் கப்பலான ‘நிரேக்க்ஷக்’ பயிற்சிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கான ஆதரவு மீள்பரிசீலனை – சிறிலங்கா அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம்  மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோத்தாவின் இந்திய பயணத்தை சீர்குலைக்கவே பெயர்ப்பலகைககள் அழிப்பு  – மகிந்த

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை குழப்ப முனையும் ஒரு குழுவினரே,  தென்பகுதியில் தமிழ் மொழியிலான வீதிப் பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

புத்தளத்தில் றிசாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுதீன் பயணம் செய்த வாகனம் மீது, புத்தளத்தில் தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரானார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  நியமிக்கப்பட்டுள்ளார்.சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.