மேலும்

Archives

உயர்பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு பிரச்சினையை தீர்க்க சிறப்புக் குழு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள காணிகளில், இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக குழுவொன்றை அமைத்து, உரிய தீர்வு காணப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சராக ஹபிஸ் நசீர் பதவியேற்பு – அம்பாறையில் கடும் எதிர்ப்பு.

கிழக்கு மாகாணசபையின்  புதிய முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹபிஸ் நசீர் அகமத் இன்று  மாலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வவுனியாவில் சிறிலங்கா காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் காயம்

வவுனியாவில் ரோந்து சென்ற சிறிலங்கா காவல்துறையினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.

யாழ். செல்லவில்லை நிஷா பிஸ்வால் – சிறிலங்கா பயணம் நிறைவு

தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்குச் செல்லாமல் இன்றுடன் தனது சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளார்.

நிஷா பிஸ்வாலுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர், தலைமைச் செயலர் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய தலைமைச் செயலராக சிறிலங்கா நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரியான ஏ.பத்திநாதன் இன்று காலை  பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க – சிறிலங்கா இராஜதந்திர உறவு புதிய மட்டத்தை எட்டும் – மங்கள சமரவீர

அமெரிக்கா இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்தவாரம் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மனித உரிமைகள் பிரச்சினையை தீர்க்க சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயார் – நிஷா பிஸ்வால்

மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

நாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின

கொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன.