பீஜிங் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர் – சீனத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு
சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சீனத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சீனத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல்தொகுதி வீடுகள், இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடைபெற்றது.
சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடக்கிலுள்ள மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, நகர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கத்துக்குள் உள்வாங்கியுள்ளதை அடுத்து, சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பீல்ட் மார்ஷல் தரத்துக்குப் பதவிஉயர்த்தப்பட்டார்.
சிறிலங்காவில் மேலும் 26 அமைச்சர்கள் இன்று புதிதாகப் பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைக்கும் பௌத்த பிக்குகளின் முயற்சி குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ‘நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்னும் தலைப்பில்,’நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.