மேலும்

Archives

தென்னாபிரிக்க அதிபர் சூமாவை கட்டுநாயக்கவில் சந்தித்துப் பேசினார் மங்கள சமரவீர

சீனா செல்லும் வழியில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்பு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சந்திரிகாவிடம் மோடி உறுதி

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இன்று சந்தித்தார். புதுடெல்லியில் இன்று ஆரம்பமான அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் போதே,  இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மைத்திரி கொடுத்த விருந்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபருக்கும், புதிதாகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அதிபர் நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.

மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த எதிர்ப்பு- பாரஊர்திகளை மறித்து போராட்டம்

மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அர்விந்த் குப்தா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினரான, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சிறிலங்கா வரலாற்றில், அதிபராக இருந்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.

நோர்வேயில் “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி” நூல் அறிமுகமும் சமகாலஅரசியல் விவாதக் களமும்

நோர்வே ‘தமிழ் 3’ வானொலியின் ஏற்பாட்டில், “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி”  என்ற  நூலின் அறிமுகஅரங்கும்; இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் பின் தமிழர் அரசியல் சார்ந்த விவாதக்களமும்  இடம்பெறவிருக்கிறது.