மேலும்

Archives

வடக்கு மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப மறுக்கின்றனராம் – ஜோன் கெரியிடம் மைத்திரி

பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய பயணத்தை தொடர்வதற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதி அளித்துள்ளார்.

புதிய கட்சியைப் பதிவு செய்ய மகிந்த அணியினர் எடுத்த முயற்சி தோல்வி

மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. புதிய அரசியல் கட்சியை இப்போது பதிவு செய்ய முடியாது என்று, கூட்டு எதிரணியினருக்கு சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீண்ட போருக்குப் பின்னர் கொழும்பின் அமைதிக்கான தேடல் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

பூகோள விவகாரங்களில்  வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து  மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. எந்தவொரு எதிரியும் இல்லாமல் சிறிலங்கா அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.

முடிவுக்கு வந்தது சிறிலங்கா படைகளின் ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி

சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சிறிலங்கா குறித்தும் ஐ.நா பொதுச்சபையில் பான் கீ மூன் உரை

நியூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய தொடக்க உரையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முந்திய குடியிருப்புத் தொகுதி – தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிப்பு

மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் அடையாள அட்டையை நினைவுப்பொருளாக வைத்திருக்கும் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையைத் தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் பாரிய தீ – 60இற்கு மேற்பட்ட புடைவைக் கடைகள் நாசம்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீவிபத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 60இற்கு மேற்பட்ட புடைவைக் கடைகளும், அனைத்துப் பழக்கடைகள் முற்றாக எரிந்து நாசமாகின.