மேலும்

Archives

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

லசந்தவின் உடல் தோண்டியெடுப்பு – படம்பிடித்த ஆளில்லா விமானத்தை தேடி வேட்டை

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக நேற்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

சிறிலங்காவுக்கு காலக்கெடு விதிக்கவில்லை – இந்திய அமைச்சர் கூறுகிறார்

எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளுமாறு சிறிலங்கா இந்தியாவை வற்புறுத்தவில்லை என்றும், எட்கா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு காலவரம்பு எதையும் விதிக்கவில்லை என்றும் இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நடந்த தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள்

இந்திய-சிறிலங்கா அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றன.

சிறிலங்காவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக திணைக்கள மூத்த ஆய்வு ஆலோசகர் கலாநிதி சாய் ஷாங்ஜின் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.

மத்தல விமான நிலையத்தில் விமானக்கடத்தல் முறியடிப்பு, பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை

நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக, சிறிலங்கா இராணுவக் கொமாண்டோக்கள், மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

ஒபாமாவின் விருந்துபசாரத்தில் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார்.

திருகோணமலையில் புதிய இராணுவ அருங்காட்சியகம் – புலிகளின் ஆயுதங்களும் காட்சிக்கு

திருகோணமலை, உவர்மலையில் உள்ள 22 ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறிலங்கா இராணுவம் புதிய இராணுவ அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளது. புதிய இராணுவ அருங்காட்சியகத்தை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடந்த 19ஆம் நாள் திறந்து வைத்தார்.

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க தளபதிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு

கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து, அமெரிக்க கடற்படைத் தளபதிகளுக்கும், சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.