திறைசேரியில் திருடப்பட்ட நிதியின் ஒருபகுதி அமெரிக்க வங்கியில் கண்டுபிடிப்பு
நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவி, திருடப்பட்ட திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
