வெலிக்கடைச் சிறையில் யோசிதவைச் சந்தித்தார் மகிந்த
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹோமகம நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுவிப்பதாக அரசியல்வாதிகளே வாக்குறுதி வழங்கியதாகவும், அதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்றும் கைவிரித்துள்ளார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத்.
சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவில் நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது.
விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்து, உடனடியாக விடுதலை செய்யுமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் மே 20ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.