கேள்விக்குறியாகும் சிறிலங்காவின் எதிர்காலம் – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானமானது பெரியளவில் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானமானது பெரியளவில் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல.
சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படும் சிறிலங்காவில் கடந்த பத்தாண்டாக குடும்ப ஆட்சி நிலவியது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனாவின் ஆதிக்கம் சிறிலங்காத் தீவில் நிலைநாட்டப்படுவதற்கு இக்குடும்ப ஆட்சி வழிகோலியது.
டுபாயில் உள்ள வங்கியில் ராஜபக்ச குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்டுள்ள 2 பில்லியன் டொலர் பணம் தொடர்பான விசாரணைக்கு, இந்தியாவும் அமெரிக்காவும் உதவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்ச தொடர்பில் இந்தியா விழிப்புணர்வுடன் இருப்பதே விவேகமானது. பங்களாதேசில் ஷேக் ஹசினாவிடம், பேகம் கலீடா சியா தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் சியாவை இந்தியா கருத்திலெடுக்கவில்லை. இதே தவறை மீண்டும் சிறிலங்கா விடயத்தில் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திப் பரப்புரை மேற்கொள்வதற்காக, வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்த் குப்தாவுக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.