மேலும்

Tag Archives: யாழ்ப்பாணம்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த கட்சிகள், குழுக்கள் தீவிர முயற்சி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் நோக்கில், அதிகளவு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

கூட்டமைப்பின் யாழ், திருமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான ஆசனப்பங்கீடு குறித்து இறுதி முடிவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே பெரும்பாலும், இணக்கப்பாடு எட்டப்பட்டு விட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இன்புளூவென்சா வைரசுக்கு இதுவரை 32 பேர் பலி – வடக்கிற்கும் பரவியது

சிறிலங்காவில் பரவி வரும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணப் பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத மோடி – இந்திய நாளிதழ்

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது,  யாழ்ப்பாணத்தில், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ், திருமலை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோரக் காவல்படையால் கைது

இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால், காரைக்கால் கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத் தாக்குதல் குறித்து விசாரிக்க 15 பேர் கொண்ட சிஐடி குழு யாழ். வருகை

யாழ். நீதிமன்றம் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக, சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட விசாரணைக் குழு யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

தேசிய வறுமைக்கோட்டு எல்லைக்குள் யாழ், முல்லை, அம்பாறை மாவட்டங்கள்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்கள் வறுமைக்கோட்டு எல்லைக்குட்பட்ட சராசரி தலா வருமானத்தைக் கொண்டுள்ளதாக, ஆகப் பிந்திய புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்தியப் பணியகம் – நாளை திறப்பு

சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகம் ஒன்று, கிளிநொச்சியில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில், இந்த பிராந்தியப் பணியகம் நாளை முதல் செயற்படவுள்ளது.