ஓமந்தையில் விகாரைக்காக சிறிலங்கா காவல்துறை காணி அபகரிக்கத் தடை
வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில் குதித்த இருவர் உயிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மகாவலி கங்கை நீரை வடக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான சாத்திய ஆய்வை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.