மேலும்

Tag Archives: புளொட்

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவா குழுவை உருவாக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லையாம் – கோத்தா கூறுகிறார்

சிறிலங்கா இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிகளும், 40 சிவில் சமூக அமைப்புகளும், நம்பகமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் வலுவானதாக தீர்மானத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளன.

கூட்டமைப்பின் பலம் தமிழ் வாக்காளர்களின் கையிலேயே உள்ளது – கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்- அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில்தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது.

மட்டக்களப்பில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் யார்?

அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று தெரியவருகிறது.

புளொட் சார்பில் யாழ்ப்பாணத்தில் சித்தார்த்தன், மட்டக்களப்பில் அமலன் மாஸ்டர் போட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், புளொட் சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில், அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போட்டியிடவுள்ளார்.

கூட்டமைப்பில் சுமுகமான முறையில் ஆசனப்பங்கீடு – 24 வேட்பாளர்களை நிறுத்துகிறது தமிழரசுக் கட்சி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சுக்களில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவைக் கூட்டுமாறு கூட்டணிக் கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன.