மேலும்

Tag Archives: புதுடெல்லி

இந்தியத் தூதரைச் சந்திக்க தொடர்ந்து தூது விடும் மகிந்த – நழுவும் புதுடெல்லி

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், எனினும், தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும், எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும்

ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவை திடீரெனப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை, இலங்கையை மாத்திரமன்றி உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மூடிய அறைக்குள் தனியாக நடத்திய சந்திப்பின் போது, தன்னைக் கொல்ல ‘றோ’ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக சிறிலங்கா அதிபர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே பேசப்பட்டதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மோடி – ரணில் பேச்சுக்களில் முக்கிய விடயங்கள் ஆராய்வு

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஹைதராபாத் ஹவுசில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தியத் தலைவர்களுடன் ரணில் இன்று முக்கிய பேச்சு – தமிழர் விவகாரமும் ஆராயப்படும்

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய அரசின் தலைவர்களுடன் தனித்தனியாக   – முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஊடகச் செய்திகள் பொய் – இந்திய வெளிவிவகார அமைச்சு

தம்மைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வார பிற்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக ‘ ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜிவ் காந்தியை பொறியில் சிக்க வைத்த ஜே.ஆர் – நடந்ததை விபரிக்கிறார் நட்வர் சிங்

சிறிலங்கா அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான கோரிக்கையை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்பினார் என்று, அப்போது இந்தியாவின் முன்னாள் அமைச்சர் கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை விரைவுபடுத்த சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இணக்கம்

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சிறிலங்காவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.