அடுத்த மாதம் மோடியைச் சந்திக்கிறார் மகிந்த – புதுடெல்லியில் இருந்து அழைப்பு
சிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்காவில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள சூழலில், இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்னான்டோ, கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், எனினும், தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும், எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவை திடீரெனப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை, இலங்கையை மாத்திரமன்றி உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மூடிய அறைக்குள் தனியாக நடத்திய சந்திப்பின் போது, தன்னைக் கொல்ல ‘றோ’ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக சிறிலங்கா அதிபர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே பேசப்பட்டதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஹைதராபாத் ஹவுசில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய அரசின் தலைவர்களுடன் தனித்தனியாக – முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார்.