மேலும்

Tag Archives: பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படாது

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கலந்துரையாடலுக்காகவே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சரியான சமிக்ஞையையே காண்பித்தாராம் – ‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு ருவான் ஆதரவு

விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் என்றும் அதற்காக அவரை ஆதரிப்பதாகவும், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளை திருப்திப்படுத்த முனைகிறார் மைத்திரி – கூட்டமைப்பு கண்டனம்

பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பணி இடைநிறுத்தும் செய்யும் உத்தரவை ரத்துச் செய்து, அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள உத்தரவிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவை இடைநிறுத்திய அதிகாரிகளை கண்டித்த சிறிலங்கா அதிபர்

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ நீக்கியதற்கு  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

‘ ஒரு காணொளியை வைத்து அதிகாரிகளை நீக்க முடியாது’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

வெறுமனே ஒரு காணொளியை வைத்துக் கொண்டு, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு அபயம் அளித்த சிறிலங்கா அதிபர் – மீண்டும் பணியில் சேர அனுமதி

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பணியில் இருந்து இடைநிறுத்த விடுக்கப்பட்ட உத்தரவை ரத்துச் செய்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?

லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த  பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.