மேலும்

Tag Archives: திருகோணமலை

நள்ளிரவு கொழும்பு வந்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும், ஜப்பானிய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

திருகோணமலைத் துறைமுகத்தில் ஜப்பானிய நாசகாரி

ஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் சடலங்களை அகற்ற உதவிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மகிந்தவிடம் ஆதரவு கோரினேன் – இரா.சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஆதரவு கோரியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருமலை அபிவிருத்தி திட்ட வரைவை சமர்ப்பித்தது சிங்கப்பூர் நிறுவனம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையம், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது,

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு வருகிறார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வார காலப் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடந்திய கலந்துரையாடலின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்

காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் – ஜப்பானிய நிபுணர் குழு சிறிலங்கா அதிபருடன் பேச்சு

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர்  கலாநிதி ஹிரோரோ இசுமி தலைமையிலான ஜப்பானிய அதிகாரிகளின் சிறப்புக் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

திருகோணமலையில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க கடற்படை

பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி, சிறிலங்காப் படையினருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறது.