மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு, மண்டூரில் இன்று காலை இனந்தெரியாத நபர்களால், அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்றும், 44 வயதான சச்சிதானந்தம் மதிதயான் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.