மேலும்

Tag Archives: ஐ.நா

ஐ.நா அதிகாரியை அச்சுறுத்திய இராணுவத்தினர் – சிறிலங்கா அதிபரிடம் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் ஐ.நா அதிகாரி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரவுள்ளார் அட்மிரல் கரன்னகொட

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட முன் பிணை கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் ஐ.நா அதிகாரிகள் ஆலோசனை

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டக் குழு, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

ஐ.நாவின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில் – ஜெனிவா அறிக்கைக்கு முன்னோடி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா மாநாட்டில் சிறிலங்கா விவகாரம் குறித்தும் ஆய்வு

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் மாநாட்டில், சிறிலங்கா குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களுடன் வருகிறது ஐ.நாவின் சிறப்பு விமானம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான 137 பக்க போர்க்குற்ற ஆவணம்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது.

மாலியில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் பலியான சிறிலங்கா இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மாலியில் இருந்து வெளியேறுமா சிறிலங்கா இராணுவம்?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மாலி தாக்குதலில் படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாயின் நிலை கவலைக்கிடம்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலை மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.