மேலும்

Tag Archives: இனப்படுகொலை

அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

இனப்படுகொலை சொல்லாட்சியை மென்மைப்படுத்துமாறு விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா போதனை?

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு தாமதமற்ற நீதி வேண்டும் – கலாநிதி அப்துல் ருப்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ‘தமிழ் இனத்தை நிர்மூலமாக்குவதற்கான’ திட்டமிட்ட மூலோபாயம் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மக்கள் சிறிலங்காவில் எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறானதொரு இனப்படுகொலை முயற்சி மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்பு

பிரான்சின் லியோன் நகரில் இன்று ஆரம்பமாகும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து நாள் அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்கவுள்ளது.

ஆறு ஆண்டுகளாகியும் உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை – விக்னேஸ்வரன் உரை

போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வெளிக்கொணரப்படவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான உண்மையான- நம்பகமான-  ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்படாமை,தமிழ்மக்கள் மத்தியில் விரக்தியை உருவாக்கியுள்ளது.

உணர்வுபூர்வமான நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கிறது தமிழ் சிவில் சமூக அமையம்

இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர முன்வர வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு மாகாண முதல்வருடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பு

நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

முதல்வர் விக்னேஸ்வரன் மீது ரணில் சீற்றம்

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக, வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை

வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற பதத்தை பயன்படுத்தியது புதிய அரசாங்கத்திலுள்ள பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வமடுவில் கிடந்த 35 ஆயிரம் சடலங்கள் – மன்னார் ஆயர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

போரின் இறுதிக்கட்டத்தில், விஸ்வமடுவுக்கு அருகில் 30 ஆயிரம் தொடக்கம், 35 ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.