மேலும்

Tag Archives: மாவை சேனாதிராசா

சிறிலங்காவை சிங்கள நாடாக உருவாக்க முயன்றால் தமிழீழம் உருவாகும் – மாவை எச்சரிக்கை

சிறிலங்காவைத் தனிச் சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால், தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது போகும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

பரந்தனில் தமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி – நாளை இறுதிச்சடங்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலையில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கான உலகத் தமிழர்கள் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுமாறு, வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

14 ஆண்டுகளுக்குப் பின் ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு – 2 ஈபிடிபியினருக்கு விளக்கமறியல்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்துக்குச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான 2 ஈபிடிபியினரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ள கூட்டமைப்பு பிரமுகர்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற, மாகாணசபை, உறுப்பினர்கள் ஜெனிவாவில் குவிந்துள்ளனர்.

அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்

இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை – கூட்டமைப்புக்கு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழி

போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அமெரிக்கா முன்னின்று செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சம்பூரில் மீளக்குடியேறிய மக்களுக்கு காணிஉரிமை சான்றிதழ்களை வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் திருகோணமலை சம்பூருக்கு பயணம் மேற்கொண்டு, மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

பேரினவாதிகளை பாதுகாக்க வந்துள்ளவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள் – மாவை கோரிக்கை

சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

சமஸ்டியை நிராகரித்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழமுடியாது – மாவை சேனாதிராசா

வடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.