ஜெனிவா கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்புக்குழு செல்லாது
ஜெனிவாவில் அடுத்தமாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்பு பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளரும், ஐ.நா விவகாரங்களுக்கான பதில் பணிப்பாளருமான மகிஷினி கொலன்னே இதனைத் தெரிவித்தார்.
“ஜெனிவா கூட்டத்தொடருக்கு சிறப்புக் குழு தேவைப்படாது. சிறப்புக் குழுவை அனுப்புவதால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு நிரந்தர தூதரகம் உள்ளது. அங்குள்ள அதிகாரிகள், அந்த விவகாரத்தைக் கவனித்துக் கொள்வார்கள்.
முன்னைய அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட வீணான நடைமுறைகளைப் பின்பற்ற நாம் தயாராக இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.