மேலும்

Tag Archives: இந்தியா

மத்தல விமான நிலைய அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச அமைச்சரவை உபகுழு

மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை எவ்வாறு சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருகோணமலை மீது இந்தியா, ஜப்பான் ஆர்வம்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவும், ஜப்பானும் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் கடல் படுக்கை எண்ணெய் அகழ்வு – இந்தியா, சிங்கப்பூர் போட்டி

மன்னார் கடல்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார செயலராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் பிரசாத் காரியவசம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசம், நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். அதேநாளில்,தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலராக உள்ள எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?

யப்பானியப் போர்க் கப்பல்களான ஜே..எஸ் இசுமோ (JS Izumo)  மற்றும் ஜே.எஸ் சசனமி (JS Sazanami)  ஆகியன இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து மலபார் 2017 கடல் சார் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமையானது யப்பானின் கடல் சார் ஆதிக்கம் தொடர்பான புதிய நிலைப்பாடு என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை –  இந்திய ஒப்பந்தம் 30 ஆண்டு: தோற்றது ஒப்பந்தமா ? இந்தியாவின் பாதுகாப்பா ?

இந்திய – இலங்கை ஒப்பந்தம் 30 ஆண்டினை எட்டியிருக்கும் நிலையில்,  தோற்றது ஒப்பந்தமா அல்லது இந்தியாவின் பாதுகாப்பா என்ற பேசு பொருளில் கருத்தரங்கம் ஒன்று தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்திய- சிறிலங்கா உடன்பாடே பிரபாகரனைத் தோற்கடிக்க உதவியது – நவீன் திசநாயக்க

1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அவுஸ்ரேலிய போர்க்கப்பல்

அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அன்சாக் வகையைச்  சேர்ந்த, எச்எம்ஏஎஸ் அருந்த என்ற போர்க் கப்பலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வந்துள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பளிக்கும் சட்டமூலம் விலக்கப்பட்டது ஏன்?- மகிந்த சமரசிங்க

பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம், மேலும் ஆய்வுகள் செய்யப்பட்டு, கலந்துரையாடப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தி குறித்து மகிந்த சமரசிங்கவுடன் இந்தியத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவின் துறைமுகங்கள், மற்றும் கப்பல் முறையை அபிவிருத்தி செய்வதில் இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாக கொழும்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.